ராகுல் பதவி துறப்பதிலிருந்து பின்வாங்கினார்!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வெளியிட்ட கருத்து காரணமாக அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, தனது பதவியை துறப்பதிலிருந்து பின்வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


அமேதியில் காங்கிரஸ் தோல்வியடைந்தமைக்கான பொறுப்பை ஏற்றுகொண்ட ராகுல் காந்தி, கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாகவும் அறிவித்தார். ஆனால், கட்சி நிருவாகம் இவ்விடயத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையிலேயே ப.சிதம்பரம், “ராகுல் காந்தி ராஜினாமா செய்தால் தென்னிந்தியாவிலுள்ள தொண்டர்கள் அனைவரும் தற்கொலை முடிவுக்கு செல்வார்கள்” என கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்தே ராகுல் காந்தி, தனது பதவி விலகல் விடயத்திலிருந்து பின்வாங்கியுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை வயநாடு தொகுதியில் மக்கள் உங்களுக்கு சாதனை வெற்றியை தந்துள்ளனர். ஆகவே கட்சி தலைவராக தொடர்ந்து பணியாற்ற வேண்டுமென காங்கிரஸின் ஏனைய மூத்த தலைவர்கள் ராகுல் காந்திக்கு வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.