இலங்கையில் திருமண வைபவத்தில் ஏற்பட்ட விபரீதம்!


திருமணம் வைபவம் ஒன்றில் முஸ்லிம் சமையல் கலைஞர் ஒருவர் சமைத்த உணவுகள் புறக்கணிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த 24ம் திகதி குருணாகல், கல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வின் போது சமையல் கலைஞராக முஸ்லிம் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.

இதன் காரணமாக ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் விருந்தினர்கள் உணவை புறக்கணித்துள்ளனர்.

திருமண நிகழ்வில் உறவினர்கள் மற்றும் விருந்தினர்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுக்காக மதிய உணவு விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விருந்தினர்கள் பலர் வீட்டிற்கு வந்த பின்னர் குறித்த திருமண உணவை முஸ்லிம் சமையல் கலைஞர் ஒருவரே சமைத்துள்ளார்.

கடந்த காலங்களில் அந்த பிரதேசத்தில் நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளுக்கும் இன பாகுபாடு இன்றி குறித்த சமையல் கலைஞரே சமையல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

எனினும் தற்போது ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக குறித்த கலைஞரின் உணவுகளை புறக்கணித்துள்ளனர்.

திருமண நிகழ்வில் பங்கேற்றவர்கள் தம்பதியரை வாழ்த்தி விட்டு உணவு பெற்றுக்கொள்ளாமல் சென்றுள்ளதாகவும், சிலர் இந்த திருமண வைபவத்திலேயே கலந்து கொள்ளவில்லை எனவும் கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.