22 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அரச உத்தியோகம் – பிரதமர்!!

நாட்டில் 22 ஆயிரம் பட்டதாரிகள் விரைவில் அரச சேவைக்குள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சினால் இதற்கான ஆட்களை இணைக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு கிழக்கு அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்துவதற்காக பனை அபிவிருத்தி நிதியத்தை அமைக்கும் நிகழ்வு இன்று (திங்கட்கிழமை)அலரி மாளிகையில் இடம்பெற்றது. அதில் தலைமை உரையாற்றிய போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு கருத்து தெரிவித்த அவர், “எமது அரசின் கீழ் 22 ஆயிரம் பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கான திட்டம் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பகுதி வடக்கு – கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு தேவையான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள்ளோம் இந்த அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்காக நிதி அமைச்சு வழங்கும் ஊக்குவிப்பு நிதி தொடர்பாக அமைச்சர் விரைவில் அறிவிக்கவுள்ளார்” என்றும் பிரதமர் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.