பெருந்தொகை மக்களால் பரபரப்பு! குருநாகலில் பொலிசார் குவிப்பு!!

குருணாகல் வைத்தியசாலைக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையினால் அங்கு பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.


கைது செய்யப்பட்டுள்ள வைத்தியர் சிஹாப்தீன் மொஹமட் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வைத்திய சரத் வீரபண்டாரவுக்கு இடமாற்றம் வழங்க சுகாதார அமைச்சு முயற்சிப்பதாக குற்றம் சுமத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தேரர்கள், கத்தோலிக்க போதகர்கள் உட்பட இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சந்தேகத்திற்குரிய வைத்தியருக்கு எதிரான விசாரணை நடவடிக்கைகளில் அரசியல் கைகள் படாத வகையில் நியாயமான முறையில் முன்னெடுக்க வேண்டும்.

அவ்வாறு முன்னெடுக்கவில்லை என்றால் இதனை விடவும் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை ஆர்ப்பாட்டம் காரணமாக குருணாகல் பகுதியிலுள்ள கடைகள் மூடப்பட்டு, தீவிர பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பெருமளவு மக்கள் ஒன்றுகூடியுள்ள நிலையில், அந்தப் பகுதியில் பரபரப்பு நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.