றிசார்ட், அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்க ஜனாதிபதிக்கு காலக்கெடு!!
அமைச்சர் றிசார்ட் பதியூதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 24 மணி நேர காலக்கெடுவை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி இந்த காலகெடுவுக்குள் இவர்களை பதவிகளில் இருந்து நீக்கவில்லை என்றால், பெரிய தீர்மானத்தை எடுக்க போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பு ராஜகிரியவில் உள்ள சதஹாம் செவன பௌத்த மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அமைச்சர் றிசார்ட் பதியூதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்குமாறு சாசன பாதுகாப்பு சபையின் செயலாளர்களான பௌத்த பிக்குமார் கையெழுத்திட்ட ஆவணத்தை கடந்த 22 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளித்தோம்.
இது சம்பந்தமாக ஜனாதிபதி சாதகமான பதிலை வழங்காது போனால், எதிர்வரும் 30 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு மத தலைவர்கள், புத்திஜீவிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், படையினருடன் கலந்துரையாடி அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த பகிரங்க கலந்துரையாடலில், கலந்துக்கொள்ளுமாறு, இளைஞர், யுவதிகள், ஓய்வுபெற்ற இராணுவத்தினர், பயங்கரவாதத்திற்கு எதிரான சகலருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் அத்துரலியே ரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
ஜனாதிபதி இந்த காலகெடுவுக்குள் இவர்களை பதவிகளில் இருந்து நீக்கவில்லை என்றால், பெரிய தீர்மானத்தை எடுக்க போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பு ராஜகிரியவில் உள்ள சதஹாம் செவன பௌத்த மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அமைச்சர் றிசார்ட் பதியூதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்குமாறு சாசன பாதுகாப்பு சபையின் செயலாளர்களான பௌத்த பிக்குமார் கையெழுத்திட்ட ஆவணத்தை கடந்த 22 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளித்தோம்.
இது சம்பந்தமாக ஜனாதிபதி சாதகமான பதிலை வழங்காது போனால், எதிர்வரும் 30 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு மத தலைவர்கள், புத்திஜீவிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், படையினருடன் கலந்துரையாடி அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த பகிரங்க கலந்துரையாடலில், கலந்துக்கொள்ளுமாறு, இளைஞர், யுவதிகள், ஓய்வுபெற்ற இராணுவத்தினர், பயங்கரவாதத்திற்கு எதிரான சகலருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் அத்துரலியே ரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை