மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் ஆளில்லா விமானம்!

கண்டியின் பல பகுதிகளில் இரவு நேரத்தில் ஆளில்லா விமானம் பறந்து திரிவதால் மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.


கடந்த ஒரு மாத காலமாக தலாத்துஓய, மாரசன்ன, முதுனகடை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானங்கள் பறந்து திரிகின்றன.

தினமும் இரவில் வெவ்வேறு நேரங்களில் இந்த ஆளில்லா சுற்றி திரிவதனை பலர் அவதானித்துள்ளனர்.

இரவு 7 - 11 மணி வரையிலான காலப்பகுதியியேயே இதனை அதிகமாக அவதானிக்க முடிவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

முதுனகடையில் அமைந்துள்ள கடற்படை முகாமிற்கு மேல் இந்த ட்ரோன் விமானம் பயணிப்பதாகவும், மீண்டும் மாரசன்ன, தெல்தோட்டை பிரதேசத்தை நோக்கி அவை பயணிப்பதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பாதுகாப்பு பிரிவிடம் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் இதுவரை அதுதொடர்பான தகவல்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

அண்மையில் குறித்த பகுதியில் பறந்த ஆளில்லா மீது கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட போதிலும் அந்த கமரா கடற்பகுதிக்குள் சென்று மறைந்திருந்தது.

கடந்த 21ம் திகதி இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலை அடுத்து இலங்கையில் ட்ரோன் கமராக்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு தரப்பின் தேடுதலின் போது ஐ.எஸ் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்களில் அதிகளவான ட்ரோன் கமராக்கள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.