தேசிய கல்வியியற் கல்லூரிகளின் நேர்முகத் தேர்வு!!

தேசிய கல்வியியற் கல்லூரிகளில் டிப்ளோமா பாடநெறியை பயில்வதற்கான நேர்முகத் தேர்வு குறித்த தகவலை கல்வியமைச்சு வெளியிட்டுள்ளது.


அந்தவகையில், 2016 மற்றும் 2017 கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் படி 2018 ஆம் ஆண்டுக்கான கல்வி போதனா பயிலுனர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முக பரீட்சை வரும் ஜூன் மாதம் மூன்றாம் வாரத்தில் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2019 ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் நேர்முகப் பரீட்சைக்கு தோற்றுவதற்கான அழைப்புப் கடிதம் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளது. மூன்றாம் வாரம் முதல் கல்வியற் கல்லூரிகள் மட்டத்தில் நேர்முக பரீட்சைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தேசிய கல்வியற் கல்லூரிகளில் தேசிய கல்வி போதனா டிப்ளோமா பாடநெறியை பயில்வதற்கு இம்முறை 2016 மற்றும் 2017 க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் இரு குழுக்களை ஒரே தடவையில் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் 27 பாடநெறிகளுக்காக 2016 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தர பெறுபேறுகளின் பிரகாரம் 4000 பேரும், 2017 ஆம் ஆண்டு உயர்தர பெறுபேறுகளின் படி 4000 பேரும் என மொத்தம் 8000 பேர் நாடளாவிய ரீதியிலுள்ள 19 கல்வியற் கல்லூரிகளுக்காக இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.