தற்கொலைதாரிகளின் தொலைபேசி அழைப்புகள் குறித்து CID விசாரணை!

ஏப்ரல் 21ஆம் திகதி தற்கொலை தாக்குதல்களை மேற்கொண்ட தற்கொலைதாரிகள் 9பேரின் தொலைபேசி அழைப்புகள் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


1800இற்கும் அதிகமான தொலைபேசி அழைப்புகள் குறித்து இவ்வாறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 21ஆம் திகதி இலங்கையின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 250இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர். அத்தோடு பலர் காயமடைந்து தற்போது வரையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து தற்கொலை குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது. குண்டுதாரிகள் அடையாளம் காணப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, அவர்களின் சொத்துக்கள் அரச உடமையாக்கப்பட்டதுடன், வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.