மோடியின் தனித்துவம் பற்றி ரஜனியிடம் கேள்வியெழுப்பும் சீமான்!!

பிரதமர் நரேந்திர மோடி தனித்துவமான தலைவர் என நடிகர் ரஜினிகாந்த் கூறியமைக்கு அவர் எவ்வகையில் தனித்துவம் பெற்றவர் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.


அன்னல் காந்தியடிகள், இந்திரா காந்தி, நேரு ஆகிய தலைவர்களிடம் காணப்பட்ட தனித்துவங்களுடன் ஒப்பிடுகையில், மோடி எவ்வாறான தனித்துவம் பெற்றவராக இருக்கிறார் என நடிகர் ரஜினி காந்த் விளக்கவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,நாட்டிலேயே தமிழகத்தில்தான் திரைப்படத்துறையினர் மீது அதிக கவர்சியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நடைபெற்று முடிந்த தேர்தல் நியாயமாக நடைபெற்றதா என்றும், தாங்கள் போராடுவது எதற்காக என்பதை உணராதவர்களே நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.