பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பிலிப்பைன்ஸ் மின்டானோ தீவில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 3.42 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


இந்த நிலநடுக்கம் 6.1 அலகுகளாக ரிக்டர் அளவுக்கோலில் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் பல பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் பயங்கரமாக அதிர்வுக்குள்ளாயின. இதனால், பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி திறந்தவெளிகளில் தஞ்சமடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அருகாமையில் உள்ள இந்தோனேசியாவின் சில பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.

இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் பாதிப்புகள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.