தெரிவுக்குழுவின் விசாரணைகளை திரிபுபடுத்த வேண்டாம்!!
அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதோடு பாராளுமன்ற தெரிவுக்குழுவினூடாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தேசிய பாதுகாப்புக்கு பிரச்சினை ஏற்படாத வகையிலேயே அமைந்திருந்தன.ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பில் அனைவரும் பொறுப்புக்கூறுவது அவசியமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் விசாரிக்கவென நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணை நடவடிக்கைகளை ஊடகங்களில் வெளியிடுவதை போன்று ஏனைய பாராளுமன்ற குழுக்களின் விசாரணைகளையும் ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மாத்திரமல்லாமல் ஏனைய நாடுகளிலும் பாராளுமன்றத்தில் நியமிக்கப்படும் இதுபோன்ற விசாரணைக்குழுக்களின் நடவடிக்கைகளை ஊடகங்களில் வெளியிடுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவுக்குழுவின் விசாரணைகளை மக்களுக்கு தெரியப்படுத்தும் போது ஊடகங்கள் தகவல்களை திரிபுபடுத்தாமல் வெளியிடுவது அவசியமாகும் எனவும் பேராசிரியர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை