யாழ் முன்னணியின் தலைமை செயலகத்தில் ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசனின் நினைவேந்தல் நிகழ்வு!!

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில் கட்சி தலைவர் கயேந்திரகுமார் பொன்னம்பலம். பொதுச் செயலாளர் செ. கயேந்திரன் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசன் கடந்த 2004ம் ஆண்டு மே 31ம் திகதி மட்டக்களப்பில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.