பிளஸ் 1 ரிசல்ட்: மாணவர்களை மிஞ்சிய மாணவிகள்!

பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வில் 98.03 சதவிகிதத் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளது ஈரோடு மாவட்டம்.

கடந்த மார்ச் 6ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. சுமார் 8 லட்சம் மாணவ மாணவியர் இத்தேர்வில் பங்கேற்றனர். விடைத்தாள் திருத்தும் பணி, மதிப்பெண் பட்டியல் தயார் செய்யும் பணிகள் முடிவடைந்து, இன்று (மே 8) காலை 9.30 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் 95 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 93.3 சதவிகிதமாகவும், மாணவிகள் தேர்ச்சி விகிதம் 96.5 சதவிகிதமாகவும் உள்ளது. ஈரோடு மாவட்டம் 98.03%, திருப்பூர் மாவட்டம் 97.93%, கோயம்புத்தூர் மாவட்டம் 97.64% தேர்ச்சி பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. இதற்கடுத்த இடங்களை தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் பிடித்துள்ளன.
அரசுப்பள்ளிகளில் 90.6 சதவிகிதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் 96.9%, மெட்ரிக் பள்ளிகளில் 99.1%, இரு பாலர் பள்ளிகளில் 95.1%, பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளிகளில் 96.8%, ஆண்கள் மட்டும் படிக்கும் பள்ளிகளில் 90.2% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.