யாழ். வலிகமம் வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்படுமாம்!!

யாழ்ப்பாணம் வலிகமம் வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெறும். கடந்த மாதம் ஜனாதிபதியின் வருகையின்போது 25 ஏக்கர் காணி விடுவிக்கப்பட இருந்தது எனினும் கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


எனவே இக்காணி அடுத்த மாதம் விடுவிக்கப்படவுள்ளது. சிலர் தங்கள் சுயலாப அரசியலுக்கா தேசிய பாதுகாப்புக்கு பிரச்சினை என கூறுகிறார்கள். இதனால் எந்த பாதிப்பும் இல்லை. ஜனாதிபதியின் உத்தரவு படி மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராட்சி தெரிவித்தார்.

அடுத்து மாதம் எட்டாம் திகதி முல்லைத்தீவுக்கு சில அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்க ஜனாதிபதி செல்லவுள்ளார். அங்கு காணி விடுவிப்பு பத்திரம் கையளிக்கப்படலாம்.
 ( செ.நிரூஜன்)
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.