பிரெக்ஸிற் இரண்டாவது மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் நிராகரிக்ன வாய்ப்புகள் அதிகம்!!

பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்பட்டு பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் தங்கியிருப்பதற்கு 30 சதவிகிதம் வாய்ப்புகள் காணப்படுவதாக ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் ரஸ்க் தெரிவித்துள்ளார்.

பிரெக்ஸிற் மீதான இரண்டாவது மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் மக்கள் அதை நிராகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரெக்ஸிற் மீதான மக்கள் வாக்கெடுப்பின் பின்னர் இந்த விடயம் முடிவுக்கு வருமென தாம் நம்பியதாகவும் ஆனால் தற்போது அந்த எண்ணத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் ரஸ்க் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு டொனால்ட் ரஸ்க் பிரித்தானியாவை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.