குவாத்தமாலா சிறைச்சாலைக்குள் துப்பாக்கிச்சூடு!!

குவாத்தமாலா தலைநகரை அண்மித்த குவாத்தமாலா நகரில் உள்ள சிறைச்சாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் சுமார் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.


நேற்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வன்முறையை கட்டுப்படுத்தும் நோக்கில் சுமார் ஆயிரத்து 500 படையினரும், பொலிஸாரும் சிறைச்சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து சுமார் எட்டு மணிநேரம் வரை சிறைச்சாலைக்குள் நீடித்த வன்முறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இரு கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலே இந்த வன்முறையை தூண்டிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1970களில் ஆயிரம் கைதிகளை சிறை வைக்கும் வகையில் அமைக்கப்பட்ட குறித்த சிறைச்சாலையில் தற்போது சுமார் 4 ஆயிரம் சிறை கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சிறைச்சாலையில் இதற்கு முன்னர் கடந்த 2016ஆம் ஆண்டு இடம்பெற் கலவரமொன்றில் 14 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.