கிளிநொச்சியில் தொடருந்துடன் மோதுண்டு முதியவர் பலி!!

கிளிநொச்சி இரணைமடுசந்தியில் நேற்றிரவு இடம்பெற்ற தொடருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இரணைமடு பகுதியை சேர்ந்த இராசேந்திரம் எனும் 62 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்தவராவர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த இரவு நேர தபால் தொடருந்துலேயே இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உடலின் மேற்பகுதி வேறாகவும், இடுப்புக்கு கீழ் பகுதி வேறாகவும் காணப்பட்டது. இந்நிலையில் தொடருந்து பயணம் தாமதமடைந்த்துடன் சடலத்தை மீட்ட தொடருந்து அதிகாரிக்கள் சடலத்தை அடுத்த தொடருந்து நிலையத்தில் ஒப்படைத்து சென்றனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.