மக்கள் முன்னால் தோப்புக்கரணம் போட ரெடியா? மம்தா கேள்வி!!

திரிணமூல் மீது சுமத்தப்பட்ட நிலக்கரி மோசடி சவாலில் தோற்றுவிட்டால் மக்கள் முன்னால் தோப்புக்கரணம் போட தயாரா? என பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான 6 ஆம் கட்ட தேர்தல் வரும் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, மம்தா உள்ளிட்ட தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் உள்ள பன்குரா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா, “திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் சட்டவிரோதமாக நிலக்கரிச்சுரங்கங்களில் இருந்து பணம் பெறுகிறார் என குற்றஞ்சட்டுகிறீர்கள்... மத்திய அரசின் கீழ் வரும் நிலக்கரி அமைச்சகமே நிலக்கரி சுரங்கங்களை கண்காணிக்கிறது.


அப்போது மத்திய அரசை சேர்ந்த பாஜகவினர் தான் சட்டவிரோத நிலக்கரி சுரண்டலில் ஈடுபடுகிறார். அப்படி எங்களில் யாராவது நிலக்கரி மாஃபியாவாக இருப்பது தெரிந்தால் ஆதாரத்துடன் நிரூபித்து காட்டுங்கள். நான் தேர்தலிலிருந்து விலகிக்கொள்கிறேன். அப்படி நீங்கள் சொல்வது பொய் என்றால் நாட்டு மக்களின் முன்னால், காதைப்பிடித்துக்கொண்டு 100 தோப்புக்கரணம் போட தயாரா என விலசினார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.