தயாரிப்பாளர் சங்கம்: அத்துமீறுகிறதா தமிழக அரசு?


தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் விஷால் தலைமையிலான நிர்வாக குழுவுக்கு எதிராக தமிழக அரசிடம் குறிப்பிட்ட சில தயாரிப்பாளர்கள் புகார் செய்தனர்.



சங்க அறக்கட்டளை வங்கி கணக்கில் இருந்த 7.5 கோடி ரூபாய் பணத்தை முறைகேடாக செலவு செய்ததாக பிரதான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. சங்கத்தின் அடிப்படை விதிமுறைகளை விஷால் தலைமை முழுமையாக கடைப்பிடிக்கவில்லை எனவும் புகார் கூறப்பட்டது. இது சம்பந்தமாக தலைவர் பொறுப்புக்கு விஷாலை எதிர்த்து கடந்த தேர்தலில் போட்டியிட்ட ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
2019 மார்ச் 31 அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழு பதவிக் காலம் முடிவுற்றதால் தனி அதிகாரியை நியமிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

சங்க நிர்வாகத்தை நடத்தவும்,விஷால் தலைமையிலான நிர்வாக குழு தவறுகள் செய்திருக்கிறார்களா என்பதை விசாரணை செய்து அறிக்கை கொடுக்க, தமிழக அரசு தனி அதி காரி ஒருவரை நியமித்து உத்தரவு பிறப்பித்தது.

தனி அதிகாரி பணிகளை விரைந்து முடிக்க அவருக்கு உதவி புரியும் வகையில் ஒன்பது பேர் இடம் பெற்றுள்ள அட்ஹாக் கமிட்டி ஒன்றை நியமித்து தனி அதிகாரி சேகர்  (மே 8) மாலை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் . பாரதிராஜா, சத்யஜோதி தியாகராஜன், SVசேகர் , ஜே.எஸ்.கே.சதிஷ்குமார், ஏற்கெனவே சங்கத்தின் நிர்வாக பொறுப்புகளில் இருந்தவர்களான K.ராஜன், அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, ராதாகிருஷ்ணன், எஸ்.எஸ். துரைராஜ், சிவசக்தி பாண்டியன் ஆகியோர் அட்ஹாக் கமிட்டி உறுப்பினர்களாக செயல்படுவார்கள் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இக்குழுவில் இடம் பெற்றுள்ள எஸ்.எஸ்.துரைராஜ் தவிர்த்து அனைவருமே விஷால் தலைமைக்கு எதிராக கொடி பிடித்தவர்கள். இவர்கள் வழிகாட்டுதல், உதவியுடன் நியாயமான விசாரணை எப்படி நடைபெறும் என விஷால் தரப்பு தயாரிப்பாளர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

தனி அதிகாரி நியமிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த வரும், சங்கத்தின் கௌரவ செயலாளர், பொருளாளராக பணியாற்றியவருமான ராதாகிருஷ்ணன், “சங்கத்துக்கு உடனடியாக தேர்தலை நடத்தவும் தவறு செய்த நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கவும்தான் நான் தொடர்ந்து போராடினேன்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அட்ஹாக் கமிட்டி ஒரு தலைபட்சமானது. தேர்தல் மூலம் வெற்றி பெற முடியாதவர்கள் கொல்லைப்புறம் வழியாக சங்கத்தை நிர்வகிக்கும் அதிகாரத்தை இது வழங்கியுள்ளது.

ஏற்கெனவே எஸ்.ஏ.சந்திரசேகர் தலைவராக இருந்த போது மறைந்த இப்ராஹிம் ராவுத்தர் தலைமையில் சங்க செயல்பாட்டுக்காக அட்ஹாக் கமிட்டி ஒன்று நியமிக்கப்பட்டது. சங்க விதிமுறைகளின் படியும், சொசைட்டி சட்டத்தின்படி அட்ஹாக் கமிட்டி நியமிக்க வழியில்லை என்று நீதிமன்றம் அதனை ரத்து செய்து உத்தரவிட்டது, எனவே தனி அதிகாரி அறிவித்திருக்கும் அட்ஹாக் கமிட்டி சட்டவிரோதமானது” என்றார் ராதாகிருஷ்ணன்.


மேலும் அவர் கூறுகையில், “குறிப்பிட்ட சிலர் பயன் பெறுவதற்காகவும், தேர்தல் நடத்தாமல் பதவி சுகத்தை அனுபவிக்கவும், அரசுக்கு வேண்டியவர்களை அட்ஹாக் கமிட்டியில் நியமித்தது தவறானது. எனவே உடனடியாக தேர்தலை நடத்த தேவைப்பட்டால் சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொள்வேன்” என்கிறார் ராதா கிருஷ்ணன்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.