முதல்வராக நீடிக்க விரும்பவில்லை- மம்தா!!
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நான் முதல்வராக நீடிக்க விரும்பவில்லை என்று கட்சிக்காரர்களிடம் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ளது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணி 350 இடங்களில் வெற்றி பெற்றது. மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 18 தொகுதிகளிலும், திருணமூல் காங்கிரஸ் 22 இடங்களிலும் வெற்றி பெற்றது. கடந்த 2014 தேர்தலில் பாஜக 2 இடங்களில் மட்டுமே வென்ற நிலையில் இந்த தேர்தலில் 18 தொகுதிகளை கைப்பற்றியது திருணமூல் காங்கிரஸ் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்று (மே 25) திருணமூல் காங்கிரஸ், தேர்தல் முடிவு தொடர்பாக அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. மம்தா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திருணமூல் காங்கிரஸ் வேட்பாளர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் பிற மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றது குறித்து ஆராய்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டிருக்கிறது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா பானர்ஜி, ”மத்திய படைகள் எங்களுக்கு எதிராகச் செயலாற்றின. அதனால் நெருக்கடி நிலை உருவாக்கப்பட்டது. இந்து - முஸ்லிம் பிரிவினை ஏற்பட்டது. அதனால் ஓட்டுகள் பிரிந்தன. தேர்தல் ஆணையத்திடம் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று குற்றம்சாட்டினார்.
”பாஜகவின் இந்த வெற்றியை ஏற்றுக் கொள்ள முடியாது. ராஜஸ்தான், ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் பாஜக எப்படி இத்தனை இடங்களில் வெற்றி பெற்றது. இதைக் கேட்க மக்கள் பயப்படுகிறார்கள். ஆனால் எனக்குப் பயமில்லை” என்றார்.
கடந்த 6 மாதங்களாக என்னால் பணியாற்ற முடியவில்லை அதிகாரமற்ற முதல்வராக உள்ளேன். இன்று நடைபெற்ற கூட்டத்தில் , நான் முதல்வராக இனியும் தொடர விரும்பவில்லை என்று கட்சியினரிடம் கூறினேன். இந்த நாற்காலி எனக்கானது அல்ல. கட்சிதான் எனக்கு மிகவும் முக்கியம். நான் பதவி விலகுவேன் என்று சொன்னேன். ஆனால் கட்சியினர் இதை நிராகரித்துவிட்டனர் என்று கூறியுள்ளார் மம்தா பானர்ஜி.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ளது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணி 350 இடங்களில் வெற்றி பெற்றது. மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 18 தொகுதிகளிலும், திருணமூல் காங்கிரஸ் 22 இடங்களிலும் வெற்றி பெற்றது. கடந்த 2014 தேர்தலில் பாஜக 2 இடங்களில் மட்டுமே வென்ற நிலையில் இந்த தேர்தலில் 18 தொகுதிகளை கைப்பற்றியது திருணமூல் காங்கிரஸ் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்று (மே 25) திருணமூல் காங்கிரஸ், தேர்தல் முடிவு தொடர்பாக அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. மம்தா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திருணமூல் காங்கிரஸ் வேட்பாளர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் பிற மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றது குறித்து ஆராய்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டிருக்கிறது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா பானர்ஜி, ”மத்திய படைகள் எங்களுக்கு எதிராகச் செயலாற்றின. அதனால் நெருக்கடி நிலை உருவாக்கப்பட்டது. இந்து - முஸ்லிம் பிரிவினை ஏற்பட்டது. அதனால் ஓட்டுகள் பிரிந்தன. தேர்தல் ஆணையத்திடம் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று குற்றம்சாட்டினார்.
”பாஜகவின் இந்த வெற்றியை ஏற்றுக் கொள்ள முடியாது. ராஜஸ்தான், ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் பாஜக எப்படி இத்தனை இடங்களில் வெற்றி பெற்றது. இதைக் கேட்க மக்கள் பயப்படுகிறார்கள். ஆனால் எனக்குப் பயமில்லை” என்றார்.
கடந்த 6 மாதங்களாக என்னால் பணியாற்ற முடியவில்லை அதிகாரமற்ற முதல்வராக உள்ளேன். இன்று நடைபெற்ற கூட்டத்தில் , நான் முதல்வராக இனியும் தொடர விரும்பவில்லை என்று கட்சியினரிடம் கூறினேன். இந்த நாற்காலி எனக்கானது அல்ல. கட்சிதான் எனக்கு மிகவும் முக்கியம். நான் பதவி விலகுவேன் என்று சொன்னேன். ஆனால் கட்சியினர் இதை நிராகரித்துவிட்டனர் என்று கூறியுள்ளார் மம்தா பானர்ஜி.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை