நீா்கொழும்பில் நடந்தது என்ன..?
நீா்கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் பள்ளிவாசல், வீடுகள், வா்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதுடன், வாகனங்களும் அடித்து நொருக்கப்பட்டுள்ளதுடன் தீவைத்து கொழுத்தப்பட்டும் உள்ளமை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
வீடுகளுக்குள் புகுந்த குழுவினர் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து சேதப்படுத்தியதுடன் சில வீடுகளில் நகைகள் பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் முறையிடுகின்றனர்.
நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போருதொட்ட, பலகத்துறை பிரதேசத்தில் முச்சக்கர வண்டி சங்கங்களைச் சேர்ந்த இரண்டு குழுக்களிடையே நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற கைகலப்பை அடுத்து அப்பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று எரியூட்டப்பட்டதுடன்
சில முச்சக்கர வண்டிகளும் சேதமாக்கப்பட்டன. இந்த நிலையில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டதுடன் நிலைமை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது.
இதனையடுத்து நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட பகுதியில் ஊரடங்குச்சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டது. ஊரடங்குச்சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டபோதும் குழுவொன்று முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
வாள்கள் பொல்லுகளுடன் வருகை தந்த இக்குழுவினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். ஊரடங்குச்சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டமையினால் பிரதான வீதிக்கு செல்லாமல் உள்வீதிகளால் பிரவேசித்த குழுவினரே இத்தகைய தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இந்த அசம்பாவிதங்களின்போது வீடுகள் பல தாக்கப்பட்டன. வீடுகளில் உள்ள பொருட்கள் சேதமாக்கபட்டதுடன் சில வீடுகளில் நகைகள், பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்தின்போது வாகனங்கள் பல தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் சேதமாக்கப்பட்டுள்ளன. அத்துடன் சிலர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட வேளையில் இனந்தெரியாத குழுக்கள் தாக்குதல்களை மேற்கொண்டதாக பாதிக்கப்பட்டவர்களும்
சம்பவத்தை நேரில் கண்டவர்களும் தெரிவிக்கின்றனர். பள்ளிவாசல்மீது தாக்குதல் பெரியமுல்லை லாசரஸ் வீதி, பெரியமுல்லை செல்லகந்த வீதி, தளுபத்தை, கல்கட்டுவை வீதியில் சமகி மாவத்தையில் அமைந்துள்ள வீடுகள் பலவற்றின்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்
முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியன தாக்கி சேதமாக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் 10 இற்கும் மேற்பட்ட வீடுகள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதுடன் பொருட்களும் சேதப்படுத்தப்பட்டன. பெரியமுல்லை லாசரஸ் வீதியில் தெனியவத்த பிரதேசத்தில்
உள்ள பள்ளிவாசலின் யன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. சம்பவத்தை அடுத்து முஸ்லிம் மக்கள் பெரும் அச்சத்துடன் இருந்தனர். சிலர் தமது உறவினர்களுடைய வீடுகளுக்கு பாதுகாப்பு தேடிச் சென்றனர்.
சம்பவம் தொடர்பாக முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஆயினும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட வேளையிலும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது.
கர்தினால் நேரில் விஜயம்..
இதேவேளை, கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி ஆகியோர் பலகத்துறை ஜும்மா பள்ளிவாசல், தெனியவத்த பள்ளிவாசல், பெரியமுல்லை பெரிய பள்ளிவாசல் ஆகியவற்கு விஜயம் செய்தனர்.
பெரியமுல்லை பெரிய பள்ளிவாசலில் இரு தலைவர்களும் இரு தரப்பினரும் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
பேராயர் மல்கம் ரஞ்சித் அங்கு உரையாற்றும்போது..
சிறிய குழுவைக் கொண்ட அடிப்படைவாதிகள் அண்மையில் தேவாலயங்களிலும் ஹோட்டல்களிலும் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு முஸ்லிம்கள் பொறுப்பல்ல. எனவே, முஸ்லிம்களை தாக்க வேண்டாம் என்று என்று கேட்டுக்கொள்கிறேன்.
இரு சமயத்தவர்களும் சகோதரர்களாவோம். இரு இனத்தினரும் நூறாண்டுகளுக்கு மேலாக சகோதரர்களாக வாழ்ந்தோம். இனியும் வாழவேண்டும். எனவே, கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களுக்கு தொந்தரவு செய்ய வேண்டாம். இங்குள்ள சிறிய பள்ளிவாசல் ஒன்றின்
கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்ததையும் சமயப்பாடசாலையின் கட்டடம் தாக்கப்பட்டதையும் அவதானித்தேன். இது கத்தோலிக்கர்களான எங்களுக்கு பொருத்தமானது அல்ல. இவ்வாறு நாங்கள் செய்யக்கூடாது. அப்படி நடந்தால் நாங்கள் எமது சமயத்திற்கு எதிராக நடந்துகொண்டதாக அமையும்.
நாங்கள் முஸ்லிம்களுடன் சகோதரர்களாக பழக வேண்டும். நடந்த சம்பவத்திற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். இதன்போது மேல்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் , நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் சந்தன அத்துகோரல,
கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
வீடுகளுக்குள் புகுந்த குழுவினர் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து சேதப்படுத்தியதுடன் சில வீடுகளில் நகைகள் பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் முறையிடுகின்றனர்.
நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போருதொட்ட, பலகத்துறை பிரதேசத்தில் முச்சக்கர வண்டி சங்கங்களைச் சேர்ந்த இரண்டு குழுக்களிடையே நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற கைகலப்பை அடுத்து அப்பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று எரியூட்டப்பட்டதுடன்
சில முச்சக்கர வண்டிகளும் சேதமாக்கப்பட்டன. இந்த நிலையில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டதுடன் நிலைமை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது.
இதனையடுத்து நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட பகுதியில் ஊரடங்குச்சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டது. ஊரடங்குச்சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டபோதும் குழுவொன்று முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
வாள்கள் பொல்லுகளுடன் வருகை தந்த இக்குழுவினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். ஊரடங்குச்சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டமையினால் பிரதான வீதிக்கு செல்லாமல் உள்வீதிகளால் பிரவேசித்த குழுவினரே இத்தகைய தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இந்த அசம்பாவிதங்களின்போது வீடுகள் பல தாக்கப்பட்டன. வீடுகளில் உள்ள பொருட்கள் சேதமாக்கபட்டதுடன் சில வீடுகளில் நகைகள், பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்தின்போது வாகனங்கள் பல தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் சேதமாக்கப்பட்டுள்ளன. அத்துடன் சிலர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட வேளையில் இனந்தெரியாத குழுக்கள் தாக்குதல்களை மேற்கொண்டதாக பாதிக்கப்பட்டவர்களும்
சம்பவத்தை நேரில் கண்டவர்களும் தெரிவிக்கின்றனர். பள்ளிவாசல்மீது தாக்குதல் பெரியமுல்லை லாசரஸ் வீதி, பெரியமுல்லை செல்லகந்த வீதி, தளுபத்தை, கல்கட்டுவை வீதியில் சமகி மாவத்தையில் அமைந்துள்ள வீடுகள் பலவற்றின்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்
முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியன தாக்கி சேதமாக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் 10 இற்கும் மேற்பட்ட வீடுகள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதுடன் பொருட்களும் சேதப்படுத்தப்பட்டன. பெரியமுல்லை லாசரஸ் வீதியில் தெனியவத்த பிரதேசத்தில்
உள்ள பள்ளிவாசலின் யன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. சம்பவத்தை அடுத்து முஸ்லிம் மக்கள் பெரும் அச்சத்துடன் இருந்தனர். சிலர் தமது உறவினர்களுடைய வீடுகளுக்கு பாதுகாப்பு தேடிச் சென்றனர்.
சம்பவம் தொடர்பாக முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஆயினும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட வேளையிலும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது.
கர்தினால் நேரில் விஜயம்..
இதேவேளை, கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி ஆகியோர் பலகத்துறை ஜும்மா பள்ளிவாசல், தெனியவத்த பள்ளிவாசல், பெரியமுல்லை பெரிய பள்ளிவாசல் ஆகியவற்கு விஜயம் செய்தனர்.
பெரியமுல்லை பெரிய பள்ளிவாசலில் இரு தலைவர்களும் இரு தரப்பினரும் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
பேராயர் மல்கம் ரஞ்சித் அங்கு உரையாற்றும்போது..
சிறிய குழுவைக் கொண்ட அடிப்படைவாதிகள் அண்மையில் தேவாலயங்களிலும் ஹோட்டல்களிலும் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு முஸ்லிம்கள் பொறுப்பல்ல. எனவே, முஸ்லிம்களை தாக்க வேண்டாம் என்று என்று கேட்டுக்கொள்கிறேன்.
இரு சமயத்தவர்களும் சகோதரர்களாவோம். இரு இனத்தினரும் நூறாண்டுகளுக்கு மேலாக சகோதரர்களாக வாழ்ந்தோம். இனியும் வாழவேண்டும். எனவே, கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களுக்கு தொந்தரவு செய்ய வேண்டாம். இங்குள்ள சிறிய பள்ளிவாசல் ஒன்றின்
கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்ததையும் சமயப்பாடசாலையின் கட்டடம் தாக்கப்பட்டதையும் அவதானித்தேன். இது கத்தோலிக்கர்களான எங்களுக்கு பொருத்தமானது அல்ல. இவ்வாறு நாங்கள் செய்யக்கூடாது. அப்படி நடந்தால் நாங்கள் எமது சமயத்திற்கு எதிராக நடந்துகொண்டதாக அமையும்.
நாங்கள் முஸ்லிம்களுடன் சகோதரர்களாக பழக வேண்டும். நடந்த சம்பவத்திற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். இதன்போது மேல்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் , நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் சந்தன அத்துகோரல,
கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை