சுற்றுலாப் பயணிகளின் வருகையை மீண்டும் கட்டியெழுப்ப, பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்!!

நெதர்லாந்து சுற்றுலாப் பயணிகளின் வருகையை மீண்டும் கட்டியெழுப்ப, இலங்கையில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்து தூதுவர் ஜோன் டோர்னீவோர்ட் இன்று (வெள்ளிக்கிழமை) எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார்.
விஜேராமயிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இதன்போது இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு நெதர்லாந்து அரசாங்கம் மற்றும் நாட்டு மக்கள் சார்பில் தூதுவர் வருத்தத்தை தெரிவித்தார்.
அத்துடன், நெதர்லாந்து சுற்றுலாப் பயணிகள் மீண்டும் இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டுமாயின், நாட்டில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் நெதர்லாந்து பிரஜையொருவரும் உயிரிழந்தார். அது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் நெதர்லாந்து தூதுவரிடம் கவலை தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.