உணர்ச்சிபூர்வமாக நியூசிலாந்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! 📷
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அறிவுபூர்வமானதாகவும் கருத்தூட்டல் நிறைந்த துக்கத்தின் கூடலாகவும் நினைவூட்டும் மக்கள் பேரணி ஒன்று பூமிப்பந்தில் முதல் நிகழ்வாக நிகழ்ந்துள்ளது.
நியூசீலாந்தின் ஓக்லாந்து நகரில் இன்று வைகாசி பதினெட்டாம் நாள் மதியம் இது இடம்பெற்றது.
தமிழ் இனத்திற்கு நடந்த அநீதிகளையும் , வலிகளையும் நியூசிலாந்தில் வாழும் பிற சமூக மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாகவும் ,
சர்வதேசத்திற்கு 2009 ம் ஆண்டு இடம்பெற்ற தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையின் 10 வது வலிசுமந்த ஆண்டை நினைவுபடுத்தியும் இடம்பெற்ற இதனை
நியூசீலாந்து தமிழ் அமைப்புக்களின் ஒன்றியமும் நியூசீலாந்து ஈழத்தமிழர் இல்லமும் இணைந்து நடத்தின. நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களும் , அரசு சார்பற்ற பொதுநல அமைப்பு பிரமுகர்களும் மனித உரிமமைக் செயற்பாட்டாளர்களும் இதில் கலந்து கொண்டனர் .
பாராளுமன்ற உறுப்பினரும் தொழிற்கடசியின் இனக்குழுமங்கள் விவகாரம் தொடர்பான பேச்சாளரும் அமைச்சின் இரண்டாம் செயலாளருமான மைக்கல் வுட் ,பிரியங்கா ராதாகிருஷ்ணன், நியூசீலாந்து தேசியக் கடசியின் பா உ ப்ரேம்ஜித் பாமர் ,க்ரீன் (பச்சைக்) கடசியைச் சேர்ந்த ஜான் லோகி , கோலரிஸ் கிரஹமான் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
உறுப்பினர் பொதுமக்கள் ஒன்றுகூடல் பகல் 12.00 மணிக்கு ஆரம்பமாகி, 1.00 மணியளவில் கண்காட்சியும்,, பாராளுமன்ற உறுப்பினர்களின் உரைகளும் , இடம்பெற்றன.
அமைப்பினரால் வழங்கப்பட்ட முறையீட்டிற் கு ஆதரவு வழங்குவதாக அவர்கள் தெரிவித்தனர்.
நியூசிலாந்து நாட்டில் இதுவரை நடந்த தமிழ்ர்களின் நிகழ்வுகள் எதிலும். இவ்வளவு பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட தில்லை என இந்நிகழ்வில் கலந்துகொண்ட பிரமுகர் ஒருவர் கூறினார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
நியூசீலாந்தின் ஓக்லாந்து நகரில் இன்று வைகாசி பதினெட்டாம் நாள் மதியம் இது இடம்பெற்றது.
தமிழ் இனத்திற்கு நடந்த அநீதிகளையும் , வலிகளையும் நியூசிலாந்தில் வாழும் பிற சமூக மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாகவும் ,
சர்வதேசத்திற்கு 2009 ம் ஆண்டு இடம்பெற்ற தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையின் 10 வது வலிசுமந்த ஆண்டை நினைவுபடுத்தியும் இடம்பெற்ற இதனை
நியூசீலாந்து தமிழ் அமைப்புக்களின் ஒன்றியமும் நியூசீலாந்து ஈழத்தமிழர் இல்லமும் இணைந்து நடத்தின. நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களும் , அரசு சார்பற்ற பொதுநல அமைப்பு பிரமுகர்களும் மனித உரிமமைக் செயற்பாட்டாளர்களும் இதில் கலந்து கொண்டனர் .பாராளுமன்ற உறுப்பினரும் தொழிற்கடசியின் இனக்குழுமங்கள் விவகாரம் தொடர்பான பேச்சாளரும் அமைச்சின் இரண்டாம் செயலாளருமான மைக்கல் வுட் ,பிரியங்கா ராதாகிருஷ்ணன், நியூசீலாந்து தேசியக் கடசியின் பா உ ப்ரேம்ஜித் பாமர் ,க்ரீன் (பச்சைக்) கடசியைச் சேர்ந்த ஜான் லோகி , கோலரிஸ் கிரஹமான் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
உறுப்பினர் பொதுமக்கள் ஒன்றுகூடல் பகல் 12.00 மணிக்கு ஆரம்பமாகி, 1.00 மணியளவில் கண்காட்சியும்,, பாராளுமன்ற உறுப்பினர்களின் உரைகளும் , இடம்பெற்றன.
அமைப்பினரால் வழங்கப்பட்ட முறையீட்டிற் கு ஆதரவு வழங்குவதாக அவர்கள் தெரிவித்தனர்.
நியூசிலாந்து நாட்டில் இதுவரை நடந்த தமிழ்ர்களின் நிகழ்வுகள் எதிலும். இவ்வளவு பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட தில்லை என இந்நிகழ்வில் கலந்துகொண்ட பிரமுகர் ஒருவர் கூறினார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo













.jpeg
)





கருத்துகள் இல்லை