கன்னியா பகுதி சுற்றிவளைப்பில் ஒருவர் கைது!!


திருகோணமலை, கன்னியா பகுதியில் கைத்துப்பாக்கியுடன் சந்தேகநபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


முப்படையினர் இணைந்து இன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கன்னியா, மாங்காயூற்று பகுதியை சேர்ந்த 52 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

மாங்காயூற்று பகுதியில் முப்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது வீடொன்றில் இருந்து சிறிய ரக கைத்துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டதோடு, வீட்டின் உரிமையாளரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் வீட்டின் காணியை சுத்தம் செய்த போது இந்த சிறிய ரக கைத்துப்பாக்கியை மீட்டதாகவும், அதனை பாதுகாப்பாக வீட்டுக்குள் வைத்திருந்ததாகவும் அந்த நபர் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் பொலிஸார் புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் வாசஸ்தலத்தில் இன்று மாலை அவரை ஆஜர்படுத்த உள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.