மனித வியாபாரத்திற்கு வலுப்படுத்தல் செயற்திட்டத்தின் மாவட்ட அறிமுகக் கூட்டம்!!

இலங்கையில் மனித வியாபாரத்திற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்தல் செயற்திட்டத்தின் மாவட்ட அறிமுகக் கூட்டமானது அண்மையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபர் திரு.நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இவ் அறிமுகக்கூட்டத்தில் SOND நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா, IOM நிறுவன திட்ட இணைப்பாளர் எஸ்.சுசீகரன், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சொண்ட் நிறுவன பணியாளர்கள்; கலந்துகொண்டனர்.
SOND நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா அவர்கள் திட்டத்தின் அறிமுகம், மனித விற்பனை, மனித விற்பனை தொடர்பாக இலங்கையில் காணப்படுகின்ற நிலமைகள், அரசின் நடவடிக்கைகள், இத்திட்டத்துடன் தொடர்புடைய அமைச்சுக்கள், பாதிக்கப்பட்டவர்களை இனங்காணல் மற்றும் திட்டத்தினுடைய செயற்பாடுகள் தொடர்பாகவும் எடுத்துரைத்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo






கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.