சாய்ந்தமருது பயங்கரவாதிகள் மறைத்துவைத்த பெருந்தொகையான வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு!

சாய்ந்தமருதில் குண்டுவெடிப்பு நடவடிக்கையை மேற்கொண்ட பயங்கரவாதிகள் மறைத்துவைத்த பெருந்தொகையான வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


இந்த வெடிபொருட்கள் காத்தான்குடி கடற்கரைப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

கடந்த ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்களையடுத்து நாட்டிப் பல பாகங்களிலும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்போது பல இடங்களில் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்படுவதோடு, பலர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டும் வருகின்றனர்.

அந்தவகையில், கல்முனை சாய்ந்தமருது பகுதியில் குண்டுவெடிப்புக்களை மேற்கொண்ட பயங்கரவாதிகள் மறைத்து வைத்திருந்ததாக கூறப்படும் குறித்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.