முஸ்லிம்களின் தீவிரவாதிகள் இல்லையென்று அமெரிக்காவிடம் ஹக்கீம் தெரிவிப்பு!!

நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களின் அச்சத்தை போக்குவது இன்றைய அவசர தேவையாக காணப்படுவதாக உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.


இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் இன்று (வெள்ளிக்கிழமை) அமைச்சர் ரவூப் ஹக்கீமை சந்தித்தார்.

அமைச்சரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற் சந்திப்பில், நாட்டில் அண்மையில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களை தொடர்ந்து நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

நாட்டில் அண்மையில் நடந்த துரதிஷ்ட சம்பவங்களின் பின்னர் இலங்கை முஸ்லிம்கள் தாம் மேலும் துருவப்படுத்தப்பட்டுள்ளதாக உணர்வதாகவும் இதன்போது அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும், தற்கொலை தாக்குதல்களின் உண்மையான சூத்திரதாரிகளை சரிவர கண்டறிவதில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, முஸ்லிம் பெண்கள் அணியும் உடைகள் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடர்பாக தூதுவர் வினவியுள்ளார். அதற்கு பெண்களின் உடை பற்றிய விவகாரம் தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாக அமைச்சர் பதிலளித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.