யேர்மனியில் சிறப்புமிக்க ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலய இரதோற்சவ தேர்த் திருவிழா!!📷

யேர்மனியில் சிறப்புமிக்க ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயத்தின்  இரதோற்சவ தேர்த் திருவிழா பல்ஆயிரக்கணக்கானோர் புடைசூழ இன்று (சனிக்கிழமை) சிறப்பாக நடைபெற்றது.


வூப்பெற்றால் ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

ஆலயத்தின் பிரதமகுரு குருக்கள் தலைமையில் நடைபெற்றுவரும் இந்த மஹோற்சவத்தில் நேற்று ஆலயத்தில் திருவேட்டை திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

இன்று காலை மூல மூர்த்திக்கு அபிஷேகம் மற்றும் கொடித் தம்பத்திற்கான அபிஷேகம் நடைபெற்று வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ நவதுர்க்காதேவி அம்பாளுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.

அதனைத்தொடர்ந்து அம்பாள் உள்வீதியுலா வந்ததையடுத்து வெளிவீதிக்கு வந்து தேரில் எழுந்தருளினார்.

தேர்முட்டியருகே விசேட பூஜைகள் நடைபெற்று அடியார்கள் புடைசூழ மேளதாளங்கள் முழங்க பெண்கள் ஒரு பகுதியாகவும் ஆண்கள் ஒரு பகுதியாகவும் தேர் இழுக்க ரத உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த தேர் உற்சவத்தில் யேர்மனியில் பல்வேறு நகரங்களில் இருந்து பெருமளவானோர் பத்தர்கள் கலந்துகொண்டனர்.

ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தீர்த்தோற்சவம் நாளை காலை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.









































கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.