தென்னிலங்கை அரசியல்வாதிகள் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை கைவிட வேண்டும்-சுரேஸ்!!

சிங்கள பௌத்த மேலாதிக்கத்தினை தென்னிலங்கை அரசியல்வாதிகள் கைவிட்டால்தான் நாட்டில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியும் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று (புதன்னகிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே லேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், தற்போதும் சிங்கள பௌத்த மேலாதிக்கம் இலங்கையில் நடைமுறையில் உள்ளதாக தெரிவித்தார்.

இதன் காரணமாகவே சிங்கள குடியேற்றங்கள் கொண்டுவரப்படுவதாகவும் பௌத்த கோயில்கள் அமைக்கப்படுவதாகவும் முஸ்லிம் கடைகளுக்க எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டினார்.

இனங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஏற்பட வேண்டுமென எண்ணும் அரசியல்வாதிகள் சிங்கள பௌத்த மேலதிக்கத்தை கைவிட்டு அனைவரும் சமமானவர்கள் என்ற கருத்துக்கு வந்தால் மட்டுமே இலங்கையிலுள்ள 90 வீத பிரச்சினைகள் தீர்கப்படுமென தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.