`பயங்கரவாதத்திற்கு எதிராக துருக்கி இலங்கையுடன் இணைவு!!

பயங்கரவாத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு இலங்கை அரசாங்கத்திற்கு அனைத்து வழிகளிலும் உதவுவதற்கு துருக்கி அரசாங்கம் முன்வந்துள்ளது.


துருக்கியின் வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் செடாட் ஒனால் இன்று (வெள்ளிக்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இதன்போதே, இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு துருக்கி உதவுவதாக செடாட் ஒனால் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது, சர்வதேச ஒத்துழைப்பை பலப்படுத்துவதற்கும், பயங்கரவாத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு இலங்கை அரசாங்கத்திற்கு அனைத்து வழிகளிலும் உதவுவதற்கு துருக்கி அரசாங்கம் தயாராகவுள்ளதாக துருக்கி ஜனாதிபதி செசெப் எர்டோகன் தெரிவித்துள்ளதாக பிரதி அமைச்சர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.