ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் ஓயாது-வைகோ!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை மக்கள் போராட்டம் ஓயாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடந்த ஓராண்டாக தூத்துக்குடியில், அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை தொடர்கிறது. கடந்த ஆண்டு மே 22-ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு முதலாம் ஆண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்துவதற்குக் கூட காவல்துறை அனுமதி மறுக்கின்றது. அரங்கு கூட்டத்தில் அஞ்சலி செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
தூத்துக்குடி மக்களை ஏமாற்றி வரும் தமிழக அரசின் நடவடிக்கைகள் அனைத்தையும் முறியடிக்க, தியாகிகளின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நாளில் உறுதி ஏற்போம்.

ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூடுகின்ற வரையில் மக்கள் போராட்டம் ஓயாது என வைகோ தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.