தமிழகம் திராவிட இயக்க பூமி என்பதை பறைசாற்றியிருக்கும் தேர்தல்-வைகோ!!

மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு பெரும் வெற்றியை அளித்ததன் மூலம், தமிழகம் திராவிட இயக்க பூமி என்பதை இந்திய அரசியல் அரங்கத்துக்கு தமிழக மக்கள் பறைசாற்றியிருக்கின்றனர் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு பெரும் வெற்றி அளித்ததன் மூலம், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் கொள்கை வழியில் நிற்கின்ற திராவிட இயக்க பூமி தமிழகம் என்பதை, இந்திய அரசியல் அரங்கத்துக்குத் தமிழக மக்கள் பறைசாற்றி இருக்கின்றனர்.
சட்டப்பேரவை இடைத் தேர்தலில் சில தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற்று இருந்தாலும், அந்த அரசு அதிகாரப் பொறுப்பில் நீடிக்க எந்த உரிமையும் இல்லை.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.