மேலதிக அதிகாரம் கோரும் இராணுவத்தினர்!!! ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்!!

கைது செய்யப்படும் சந்தேக நபர்களிடம் விசாரணைகளை நடத்துவதற்கு, இராணுவத்தினருக்கு அரசாங்கம் அனுமதி அளிக்க வேண்டும் என இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.


தற்போது, இராணுவத்தினர் கைது செய்யும் சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுகின்றனர்.

அவ்வாறு கைது செய்யப்படும் சந்தேக நபர்களை விசாரணை செய்யும் அதிகாரத்தை நாங்கள் கேட்கிறோம்.

ஏனென்றால், கைது செய்யப்பட்டவுடன், அவர்களிடம் இருந்து வாக்குமூலம் பெறுவது நல்லது என நாங்கள் நினைக்கிறோம்.

இதற்கு அரசாங்கத்தின் அனுமதி கிடைக்கும் என்று நான் நினைக்கிறேன் என இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.