யாழ் பல்கலைகழக மாணவர் தொடர்பான பதில் திங்கள் வெளியாகும்!!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை சாதகமான பதில் கிடைக்கபெறும் என ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலர்கள் கூட்டாக தெரிவித்ததாக மாணவர் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.


பல்கலைக்கழக் மாணவர்களின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி சந்திப்பதாக இருந்தபோதிலும் பின்னர் அவரின் செயலரும் பாதுகாப்பு அமைச்சின் செயலரும் மாணவ பிரதிநிதிகளை இன்று கொழும்பில் சந்தித்தனர்.இந்த சந்திப்பு தொடர்பில் மாணவ பிரதிநிதிகள் தெரிவித்த[பத்தே மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளனர்.

நாம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்,ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோரை இன்று சந்தித்து எமது மாணவர்கள் மற்றும் சிற்றுண்டிசாலை நடத்துனர் ஆகியோரின் விடுதலை தொடர்பில் பேசினோம்.யாழ்ப்பான பல்கலைக்கழகத்தில் சுற்றிவளைப்பின் போது நடைபெற்ற சம்பவத்தினை நாம் அவர்களுக்கு விளக்கினோம்.

எமது கோரிக்கையை கேட்டறிந்தவர்கள் கைது செய்யப்பட்டவர்களின் விடுதலை தொடர்பில் திங்கட்கிழமை சாதகமான பதில் கிடைக்கபெறும் என எம்மிடம் உறுதியளித்துள்ளனர் .
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.