வெள்ளவத்தை - கல்கிஸ்ஸை பகுதி மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!!

வெள்ளவத்தை முதல் கல்கிஸ்ஸை வரையான கடலில் கறுப்பு நிற எண்ணெய் படிமங்கள் படிந்துள்ளதாக கடற்சூழல் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதன் காரணமாக குறித்த கடற்கரை பகுதியை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் திணைக்களம் கேட்டுள்ளது.

குறித்த கடற்கரையோரத்திற்கு இன்று காலை உடற்பயிற்சிக்காக சென்ற மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இக்கரையோர பகுதிக்கு செல்பவர்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.கே.பிரபாத் சந்ரகீர்திகே தெரிவித்துள்ளார்.

இதனால் கடற்கரை பகுதியிலிருந்து ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் செல்லுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.