வட அயர்லாந்தில் வெடிகுண்டால் பதற்றம்!

வட அயர்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.


வடஅயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் பகுதியில் செயல்ப்பட்டு வரும் கோல்ஃப் மைதானத்திற்கு அருகே கார் ஒன்றிலிருந்து இந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் இராணுவ வெடிகுண்டு அகற்றும் பிரிவினர் அங்கிருந்த 70 இற்கும் மேற்பட்ட பொதுமக்களை வெளியேற்றியுள்ளனர்.

குறித்த வெடிகுண்டினை அகற்றுவதற்காக ரோபோ ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன்காரணமாக குறித்த பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் தற்போது பொலிஸார், சம்பவம் இடம்பெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.