நள்ளிரவு வேளையில் வீதியில் நின்ற நால்வர் கைது!!

யாழ்ப்பாணத்தில் நள்ளிரவு வேளையில் வீதியில் நின்ற நால்வர் சந்தேகத்தின் பேரில் யாழ். பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


வீதி ரோந்து நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்ட வேளையில், யாழ். நகரப்பகுதியில் நேற்று நள்ளிரவு வேளையில் வீதியில் சந்தேகத்திற்கிடமாக நால்வரும் நின்றுள்ளனர்.

அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது தமது அடையாளத்தை உறுதிப்படுத்தும் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காத காரணத்தினால், கண்டியை சேர்ந்த இருவரும், நாவாந்துறை பகுதியை சேர்ந்த ஒருவரும் உள்ளிட்ட நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 27 வயது முதல் 30 வயதுடையவர்கள் என்றும், அவர்களை விசாரணையின் பின் யாழ். நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.