கேரள கஞ்சாவுடன் மூவர் கைது!!

கிளிநொச்சி - சுட்டிக்குளம் சாளை பகுதியில் வைத்து சூட்சுமமாக வாகனம் ஒன்றில் கடத்தப்பட்ட 115 கிலோ கிராம் கஞ்சாவினை மீட்டதுடன் வாகன சாரதி உட்பட மூன்று சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.


கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைவாக கிளிநொச்சி மாவட்ட சட்டவிரோத செயற்பாடுகள் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மற்றும் கல்லாறு இளைஞர்களின் உதவியுடன் குறித்த பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் மேற்கொண்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று காலை ஒன்பது மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கடல்வழியாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பின்னர் சுண்டிக்குளம் கடற்கரையில் இறக்கப்பட்டு சாளை ஊடாக வாகனத்தில் கடத்தப்பட்ட போதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் குறித்த தேடுதல் பணிக்காக பொலிஸ் குற்றத் தடவியல் பொலிஸாரின் மோப்ப நாயும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் மற்றும் கிளிநொச்சிப் பொலிஸார் இணைத்து மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.