போராட்டங்கள் எல்லாம் போலி- டொனால்ட் ட்ரம்ப்!
அமெரிக்கா மற்றும் பிரித்தானிய கூட்டணியே உலகில் மிகச்சிறந்த கூட்டணி என்று எப்போதும் அறியப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி பிரித்தானியாவுக்கான மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையிலேயே இந்த கருத்தை வௌியிட்டுள்ளார்.
பிரித்தானிய பிரதமர் தெரேசா மே-யுடன் கூட்டு செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறியதும் தனித்துவமான ஒரு வர்த்தக ஒப்பந்தம் காத்திருக்கிறது என உறுதியளித்துள்ளார்.
அதேவேளை, வெஸ்ட்மினிஸ்டரில் ஆர்ப்பாட்டக்காரர்களை சந்தித்த எதிர்க் கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பினை தாம் சந்திக்க மறுத்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் உரையாற்றய ட்ரம்ப், பேச்சுவார்த்தை நடத்துவதில் அநேகமாக தெரேசா மே தன்னைவிட சிறந்தவர் என தெரிவித்திருக்கிறார். “
தற்போதைய சூழலில் பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகளில் மே சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறும் நிகழ்வு நிச்சயம் இடம்பெறும்.
நிச்சயமாக பிரித்தானியா, ஒன்றியத்திலிருந்து விலகும் வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் பிரித்தானியா ஒரு சிறந்த நாடு மேலும் அந்த நாடு தனது அடையாளத்தை விரும்புகிறது” என டிரம்ப் தனது கருத்தை முன்வைத்தார்.
தமது வருகைக்கு எதிராக பிரித்தானியாவில் போராடுபவர்கள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ”அதெல்லாம் சிறு குழுக்கள் மற்றும் போலி செய்திகள்” எனக் கூறியுள்ளார்.
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதை தடுக்கவும், அந்த நாடு பயங்கரவாதத்தை ஆதரிப்பதும் ஈடுபடுவதும் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் உறுதி பூண்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
பிரித்தானியா மற்றும் அமேரிக்கா இடையே ஹுவாவே தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்ட போதிலும் உளவுத் தகவல்கள் பகிர்வதில் உடன்பாடு எட்டப்படும் என நம்புவதாக தெரிவித்திருக்கிறார். ஹூவாவே நிறுவனம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, பிரெக்ஸிட் குழுத் தலைவர் நிகெல் ஃபராஜ் உடன் ஜனாதிபதி ட்ரம்ப் சந்திப்பொன்றை நடத்தினார். இந்த சந்திப்புக்கு பின்னர் நிகெல் தனது டுவிட் பதிவில் ” ட்ரம்புடனான சந்திப்பு திருப்திகரமாக அமைந்தது பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதில் அவர் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறார்” எனத் தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
அமெரிக்க ஜனாதிபதி பிரித்தானியாவுக்கான மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையிலேயே இந்த கருத்தை வௌியிட்டுள்ளார்.
பிரித்தானிய பிரதமர் தெரேசா மே-யுடன் கூட்டு செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறியதும் தனித்துவமான ஒரு வர்த்தக ஒப்பந்தம் காத்திருக்கிறது என உறுதியளித்துள்ளார்.
அதேவேளை, வெஸ்ட்மினிஸ்டரில் ஆர்ப்பாட்டக்காரர்களை சந்தித்த எதிர்க் கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பினை தாம் சந்திக்க மறுத்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் உரையாற்றய ட்ரம்ப், பேச்சுவார்த்தை நடத்துவதில் அநேகமாக தெரேசா மே தன்னைவிட சிறந்தவர் என தெரிவித்திருக்கிறார். “
தற்போதைய சூழலில் பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகளில் மே சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறும் நிகழ்வு நிச்சயம் இடம்பெறும்.
நிச்சயமாக பிரித்தானியா, ஒன்றியத்திலிருந்து விலகும் வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் பிரித்தானியா ஒரு சிறந்த நாடு மேலும் அந்த நாடு தனது அடையாளத்தை விரும்புகிறது” என டிரம்ப் தனது கருத்தை முன்வைத்தார்.
தமது வருகைக்கு எதிராக பிரித்தானியாவில் போராடுபவர்கள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ”அதெல்லாம் சிறு குழுக்கள் மற்றும் போலி செய்திகள்” எனக் கூறியுள்ளார்.
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதை தடுக்கவும், அந்த நாடு பயங்கரவாதத்தை ஆதரிப்பதும் ஈடுபடுவதும் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் உறுதி பூண்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
பிரித்தானியா மற்றும் அமேரிக்கா இடையே ஹுவாவே தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்ட போதிலும் உளவுத் தகவல்கள் பகிர்வதில் உடன்பாடு எட்டப்படும் என நம்புவதாக தெரிவித்திருக்கிறார். ஹூவாவே நிறுவனம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, பிரெக்ஸிட் குழுத் தலைவர் நிகெல் ஃபராஜ் உடன் ஜனாதிபதி ட்ரம்ப் சந்திப்பொன்றை நடத்தினார். இந்த சந்திப்புக்கு பின்னர் நிகெல் தனது டுவிட் பதிவில் ” ட்ரம்புடனான சந்திப்பு திருப்திகரமாக அமைந்தது பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதில் அவர் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறார்” எனத் தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை