கனடா உயர்ஸ்தானிகர் , தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் சந்திப்பு!!

கனடாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் டேவிட் மக்னொன், தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியை சந்தித்தார்.


குறித்த சந்திப்பு இன்று (புதன்கிழமை) மாலை கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் கனடா நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் டேவிட் மக்னொன், தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியுடன் கட்சியின் செயலாளர் இரா.சங்கையா மற்றும் அரவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பில் தமிழ், இஸ்லாமிய சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

இதனிடையே, சிறுபான்மை சமூகங்களுக்கிடையில் இவ்வாறான ஒற்றுமை காணப்பட வேண்டும் என்பதை விரும்புவதாக டேவிட் மக்னொன் தெரிவித்துள்ளதாக அவர் ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.