தாயகநிலத்தில் பௌத்தர்கள் போராட்டம்!!

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதியில் மணலாறு பகுதியிலிருந்து து அழைத்துவரப்பட்ட சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.


செம்மலை பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள பகுதி குருகந்த ரஜமஹா விகாரை என்ற தமது ஆலயம் அமைந்துள்ள பகுதி எனவும் இந்த ஆலயப் பகுதியில் அரசியல்வாதிகள் பிரச்சனைகளை ஏற்படுத்தி குழப்பங்களை உண்டு பண்ணுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அத்துடன் இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கவனம் செலுத்தி தமது பிரச்சனைக்கு ஒரு தீர்வை பெற்றுத்தர வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.

குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ள செம்மலை பிள்ளையார் ஆலயத்தில் தமிழ் மக்கள் வழிபாட்டுகளை மேற்கொள்ளவும் அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்ளவும் மாவட்ட நீதிமன்று அனுமதி வழங்கியிருந்தது.

அதோடு இரண்டு தரப்பினரும் அமைதிக்கு பங்கம் இன்றி வழிபாடுகளை மேற்கொள்ளுமாறும் மாவட்ட நீதிமன்று கட்டளையிட்டிருந்தது.

இந் நிலையில் மீண்டும் இன்றையதினம் பௌத்த பிக்குகளும் சிங்கள மக்களும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை இந்த ஆர்ப்பாட்டத்தை புல்மோட்டை பகுதியிலிருந்து சென்ற பௌத்த பிக்குகள் தலைமை தாங்கி நடத்தியிருந்தமை குறிப்பிடத்த்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.