தென்னிலங்கையில் மர்மக்கொலை!!

தென்னிலங்கையில் நபர் கொடூரமான முறையில் கும்பல் ஒன்றினால் கொலை செய்யப்பட்டுள்ளார்.


ஹம்பாந்தோட்டை திஸ்ஸமஹாராம பகுதியில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கும்பல் ஒன்று இணைந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் கூர்மையாக ஆயுதத்தில் தாக்கி கொலை செய்துள்ளனர்.

குறித்த நபர் விருந்து ஒன்றில் கலந்து கொண்டு மீண்டும் வீடு நோக்கி செல்லும் போது இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபரின் வீட்டு வாசலில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

உயிரிழந்தவர் 44 வயதான நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கும்பலை கைது செய்தற்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுவொரு இனவாத தாக்குதலாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.