சஹ்ரான் குழுவிற்கு மகிந்த அரசு கொடுப்பனவு வழங்கியதா?!!

தீவிரவாதி சஹ்ரான் ஹாசிம் தலைமையிலான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கு, மகிந்த ராஜபக்ச அரசாங்கம், நிதி கொடுப்பனவுகளை வழங்கியதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.


நாடாளுமன்றில் நேற்று உரையாற்றி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டிருந்த அவர்,

“சஹ்ரான் ஹாசிம் மற்றும் அவரது நண்பர்களான, தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த 32 பேருக்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நிதிக் கொடுப்பனவுகளை வழங்கி வந்துள்ளது.

இந்த தீவிரவாதிகளுக்கு முன்னைய ஆட்சியாளர்களால் ஊதியம் கொடுக்கப்பட்டதற்கு போதுமான சான்றுகளை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்.

எவ்வளவு நிதி கொடுக்கப்பட்டுள்ளது என்று கண்டறிய வேண்டியுள்ளது. இதனை நாங்கள் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்பாக நிரூபிப்போம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.