மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து விபத்து !!

தல்கொடபிட்டி பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 31 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தும் ஆடை தொழிற்சாலை ஊழியர்களை ஏறிச்சென்ற பேருந்தும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் 26 பேர் பாடசாலை மாணவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த மூன்று ஆடை ஊழியர்கள் மற்றும் பேருந்தின் சாரதி குருணாகலை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து சாரதியின் கவனயீனத்தால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்றும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கொகருல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.