தனயனைத் தாக்கிக்கொன்ற தந்தை!!

கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுதம் ஒன்றில் தாக்கியதன் காரணமாக இளைஞன் உயிரிழந்துள்ளார்.

இளைஞனின் தந்தை மகன் மற்றும் மனைவியை கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நீண்டகாலமாக இருந்து வந்த குடும்ப தகராறே இந்த கொலைக்கு காரணம் என மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவளத்தில் 17 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து மாளிகாவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.