தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மலாவியில் தொடர் போராட்டம்!

மலாவியில் தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


மலாவியில் கடந்த மே மாதம் 21ஆம் திகதி நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக முன்னணி கட்சி வேட்பாளர் பீட்டர் முத்தாரிகா வெற்றி பெற்றார்.

மலாவி காங்கிரஸ் கட்சியின் தலைவர் லாசரஸ் சக்வேரா தோல்வியடைந்தார். இந்த தேர்தல் முடிவை ஏற்க மறுத்த லாசரஸ், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அத்துடன், தேர்தலில் மோசடியில் ஈடுபட்டு பீட்டர் முத்தாரிகா வெற்றி பெற்றுவிட்டதாக கூறி, மலாவி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தலைநகர் லிலோங்வியிலுள்ள கட்சி தலைமையகத்தில் தொண்டர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்தது.

கூட்டத்தில் இருந்தவர்கள் கற்களை வீசி தாக்கினர். இதனால், கூட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியுள்ளனர்.

இதன்காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.