இலங்கையிலுள்ள அரேபிய மொழி பெயர்ப் பலகைகளை அகற்றுமாறு அரசாங்கம் உத்தரவு!!

இலங்கையில் அராபி மொழியில் உள்ள அனைத்து பெயர் பலகைகளையும் அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடல் மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாணம் உட்பட பல பிரதேசங்களில் அரேபிய மொழியில் பெயர்கள் மற்றும் பதாதைகள் காணப்படுகின்றன. அவை அனைத்தையும் முற்றாக அகற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சில அரச நிறுவனங்களில் அரேபிய மொழிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதென அமைச்சர் கூறியுள்ளார்.

சிங்களம், தமிழ், ஆங்கில மொழியை தவிர வேறு எந்த மொழியையும் காட்சிப்படுத்த அனுமதி வழங்கப்படாதென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் பிரதேச சபை, நகர சபை மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் ஊடாக அந்த பெயர் பலகைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.