அரச ஊழியர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்!!

அரசாங்க உத்தியோகஸ்தர்கள் உடை கட்டுப்பாடு குறித்த சுற்றுநிரூபத்தை திருத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதால் அதன் விதிகளை செயல்படுத்த தேவையில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


அரசாங்கத்திற்கு சொந்தமான அலுவலகங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அரசாங்க அதிகாரிகளின் ஆடைகள் தொடர்பில் பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் கடந்த மாதம் 31ம் திகதி சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டது.

இந்த சுற்றுநிரூபம் தொடர்பாக பலத்த எதிர்ப்புக்களும் பல விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவால் குறித்த சுற்றுநிரூபம் திருத்துவதற்கான நடவடிக்கை இடம்பெற்று வருவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.