நெருப்பில் வெந்து இறந்த மலையகப்பெண்!!
மேலும், இந்த விபத்தினால் குறித்த வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளை, பிங் அராவ பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த தீ விபத்தினால், தம்மிகா ரத்னாயக்க எனும் 45 வயதுடைய 3 பிள்ளைகளின் தாய் ஒருவரே உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து இடம்பெற்ற நேரம், பெண்ணின் மகன்கள் இருவரும் பாடசாலைக்குச் சென்றிருந்ததாகவும் இன்னொரு மகள் வேலைக்குச் சென்றிருந்ததாகவும் கூறப்படுகிறது.
குறித்த பெண்ணின் வீட்டிலிருந்து சத்தம் கேட்டதையடுத்து, அயலவர்கள் ஒன்றிணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
சம்பவம் குறித்து பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை