ராஜிதவிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்!
இந்த ஆர்ப்பாட்டம் இன்று (வியாழக்கிழமை) மாவட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நாட்டின் சுகாதார சேவைக்கு மிகப்பாதகமான முறையில் நடந்துகொள்வதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் மட்டத்தில் அதிகமான பிணக்குகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
இதன் காரணமாக அமைச்சர் பதவியிலிருந்து அவரை நீக்கவேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
அத்துடன், அமைச்சரின் முறைகேடுகள் தொடர்பாக தாம் ஆதாரங்களுடன் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் முறையிட்டுள்ள போதிலும் இதுவரை காலமும் அவருக்கெதிராக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும் அமைச்சரின் குடியியல் உரிமை பறிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச குற்றச்சாட்டுகள் எழுதப்பட்ட துண்டுப்பிரசுரங்களும் இதன்போது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை